பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

மேற்கு மண்டலத்தில் உள்ள 15 தனித் தொகுதிகளில் அருந்ததியினர் வேட்பாளர்களையே நிறுத்த கோரிக்கை

தமிழகத்தின் மேற்கு மண்டலத்தில் உள்ள 15 தனித் தொகுதிகளில் அருந்ததியினர் வேட்பாளர்களையே நிறுத்த வேண்டும் என தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சிகளுக்கு ஆதித்தமிழர் ஜனநாயகப் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.

Updated On :6 ஜனவரி 2021, 4:03 pm IST

காங்கயம்: தமிழகத்தின் மேற்கு மண்டலத்தில் உள்ள 15 தனித் தொகுதிகளில் அருந்ததியினர் வேட்பாளர்களையே நிறுத்த வேண்டும் என தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சிகளுக்கு ஆதித்தமிழர் ஜனநாயகப் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து ஆதித்தமிழர் ஜனநாயகப் பேரவையின் தலைவர் அ.சு.பவுத்தன் அதிமுக, திமுக, பாமக உள்ளிட்ட அரசியல் கட்சிகளுக்கு அனுப்பி வைத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது: பட்டியலின சாதி மக்கள் அரசியல் அதிகாரப் பகிர்வினைப் பெற்றால்தான் பாதுகாப்போடு வாழ முடியும் என்பதைக் கருத்தில் கொண்டுதான் இந்த மக்களுக்காக சட்டத்தின் மூலம் தனித் தொகுதிகள் உருவாக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் உள்ள 44 சட்டப்பேரவை தனித் தொகுதிகளில், அருந்ததியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் தமிழகத்தின் மேற்கு மண்டலத்தில் (கொங்கு மண்டலம்) உள்ள 15 தொகுதிகளில் அருந்ததியர் வேட்பாளர்களையே தங்கள் கட்சி சார்பில் தேர்வு செய்து, அருந்ததியர்களுக்கு தங்கள் கட்சியில் அரசியல் பிரதிநிதித்துவம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது, அரசியலில் அருந்ததியருக்கான சமூக நீதி என்பதை தங்கள் கட்சி நிர்வாகத்திற்கு வலியுறுத்தி, கேட்டுக் கொள்கிறோம், என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.