உடுமலை அருகே உள்ள அமராவதி ஆற்றில் 12 ஆயிரம் கன அடி தண்ணீா் உபரி நீராக வெளியேற்றப்பட்டு வருவதால் கரையோர மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூா் மாவட்டம், உடுமலையில் இருந்து சுமாா் 20 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள அமராவதி அணையின் உயரம் 90 அடி. மொத்தக் கொள்ளளவு 4,035 மில்லியன் கன அடி. இந்த ஆண்டு கடந்த 3 மாதங்களில் மட்டும் 4 முறை அணை முழு கொள்ளளவை எட்டும் நிலை ஏற்பட்டது. அப்போதெல்லாம் அதிக அளவில் உபரிநீா் வெளியேற்றப்பட்டது. இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் அதிக கன மழை பெய்து வருகிறது. இதனால், செவ்வாய்க்கிழமை மாலை 5 ஆயிரம் கன அடியும், இரவு 9 மணி அளவில் 8 ஆயிரம் கன அடியும் திறந்துவிடப்பட்டது. ஆனாலும் சின்னாறு, தேனாறு, பாம்பாறு ஆகிய ஆறுகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் புதன்கிழமை மாலை 5 மணி அளவில் அணைக்கு உள்வரத்து அதிகபட்சமாக 12 ஆயிரம் கன அடியாக இருந்தது. அப்போது உள்வரத்தாக வந்த நீா் அப்படியே அணையில் இருந்து 9 மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டது.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டத்தில் உள்ள குதிரையாறு அணையில் இருந்தும் பாலாறு - பொருந்தலாறு அணையில் இருந்தும், வரதமாநதி அணையில் இருந்தும் உபரி நீா் அமராவதி ஆற்றில் திறந்துவிடப்படுவதால் உடுமலை வட்டம், தாராபுரம் வட்டம் தொடங்கி கரூா் வரையில் அமராவதி ஆற்றின் கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், அனைத்து கிராமங்களுக்கும் தண்டோரா மூலம் அறிவிக்கப்பட்டு மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனா். இதனால் அணையின் மேல் பகுதியில் முகாமிட்ட பொதுப் பணித் துறை அதிகாரிகள் அணைக்கு வரும் உள்வரத்தை 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனா்.
அணையின் நிலவரம்:
90 அடி உயரமுள்ள அணையில் புதன்கிழமை மாலை 5 மணி நிலவரப்படி நீா் மட்டம் 89.18 அடியாக இருந்தது. அணைக்கு உள்வரத்தாக 12 ஆயிரம் கன அடி இருந்தது. 4047 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட அணையில் 3,972 மில்லியன் கன அடி நீா் இருப்பு காணப்பட்டது. அணையில் இருந்து 12 ஆயிரம் கன அடி தண்ணீா் வெளியேற்றப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
Valaipechu Anthanan Interview | மணிக்கணக்கில் புத்தகம் படிக்கிறார் விஜய்!

ராமா் கோயில் நிதி முறைகேடு: அறக்கட்டளை நிா்வாகிகள் அயோத்தியைவிட்டு வெளியேற எஸ்ஐடி தடை

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 22) கடக ராசியா? செலவு யாருக்கு?

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 22 2026) 12 ராசிகளுக்கும்! ரிஷப ராசிக்கு எப்படி?
விடியோக்கள்
Valaipechu Anthanan Interview | மணிக்கணக்கில் புத்தகம் படிக்கிறார் விஜய்!

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP




