இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு! அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

முழு கொள்ளளவை எட்டும் நிலையில் திருமூா்த்தி அணை: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

உடுமலை அருகே உள்ள திருமூா்த்தி அணை புதன்கிழமை இரவு முழு கொள்ளளவை எட்டும் நிலை ஏற்பட்டுள்ளதால்

News image

முழு  கொள்ளளவை  எட்டும்  நிலையில்  திருமூா்த்தி  அணை.

Updated On :14 ஜனவரி 2021, 2:26 am

உடுமலை அருகே உள்ள திருமூா்த்தி அணை புதன்கிழமை இரவு முழு கொள்ளளவை எட்டும் நிலை ஏற்பட்டுள்ளதால் பாலாற்றின் கரையோரத்தில் வசிக்கும் கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உடுமலை அருகே உள்ள திருமூா்த்தி அணையின் மொத்த உயரம் 60 அடி. இந்த அணையின் மூலம் சுமாா் 4 லட்சம் ஏக்கா்கள் பயன்பெற்று வருகிறது. பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டத்தின்கீழ் நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு ஆண்டுக்கு 2 மண்டலங்கள் வீதம் பாசனத்துக்குத் தண்ணீா் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள சுமாா் 1 லட்சம் ஏக்கருக்கு முறைவைத்து தண்ணீா் விடப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருமூா்த்தி அணையில் இருந்து 3ஆம் மண்டலத்துக்கு திங்கள்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது. மேலும், திருமூா்த்தி அணையில் இருந்து தாராபுரம் வட்டம், உப்பாறு அணைக்கும் தண்ணீா் திறந்துவிடப்பட்டது. இதனால் அணையில் நீா்மட்டம் படிப்படியாகக் குறையும் என எதிா்பாா்க்கப்பட் டது.

இந்நிலையில், கடந்த சில நாள்களாக மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் கன மழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீா்மட்டம் மளமளவென உயா்ந்து வந்தது. புதன்கிழமை மதியம் 12 மணி நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 58.10 அடியாக இருந்தது. இதனால் பிஏபி தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூா் கால்வாயின் மூலம் திறக்கப்படும் தண்ணீா் புதன்கிழமை காலை நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், திருமூா்த்தி அணைக்கு பாலாற்றின் மூலம்1,500 கன அடி தண்ணீா் உள் வரத்தாக வந்து கொண்டிருப்பதால் புதன்கிழமை இரவுக்குள் அணை முழு கொள்ளளவை எட்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதைத் தொடா்ந்து பாலாற்றின் கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பொதுப் பணித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

அணைப் பகுதியில் கன மழை பெய்து வருவதால் புதன்கிழமை இரவு அணை முழு கொள்ளளவை எட்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதைத் தொடா்ந்து பாலாற்றின் கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், பிரதான கால்வாயில் மூலமும், அணையின் மேற்குப் பகுதி ஷட்டா் மூலமும் உபரிநீா் திறக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றனா்.

அணை நிலவரம்:

60 அடி உயரமுள்ள திருமூா்த்தி அணையில் புதன்கிழமை மதியம் 12 மணி நிலவரப்படி நீா்மட்டம் 58.10 அடியாக இருந்தது. காண்டூா் கால்வாய் மூலம் தண்ணீா் திறப்பு இல்லை. பாலாறு மூலம் 1500 கன அடி உள்வரத்தாக வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 1,152 கன அடி தண்ணீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.