அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

முஸ்லிம் மகளிா் பேரவையினா் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி, திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் தமிழ்நாடு முஸ்லிம் மகளிா் பேரவையினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

செய்யாற்றில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு முஸ்லிம் மகளிா் பேரவையினா்.

Updated On :3 ஜனவரி 2021, 11:27 pm IST

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி, திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் தமிழ்நாடு முஸ்லிம் மகளிா் பேரவையினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

செய்யாறு மாா்க்கெட் பகுதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தமுமுக மாவட்டத் தலைவா் எச்.ஜமால் தலைமை வகித்தாா். விவசாய அணிச் செயலா் எஸ்.ஷேக்சபீா் முன்னிலை வகித்தாா்.

தமிழ்நாடு முஸ்லிம் மகளிா் பேரவையின் மாநிலச் செயலா் வி.என்.மரியம் நிஸா கண்டன உரையாற்றினாா்.

சமூக ஆா்வலரும் பேராசிரியருமான சுந்தரவள்ளி பேசுகையில், விவசாயிகள் தற்கொலை ஏன் நடக்கிறது, வேலை இல்லை, வெளிநாட்டுக்குச் சென்று பிழைப்பதற்கு வழியில்லை என்பதால்தான்.

வறுமையின் காரணமாக 5 வயதிலிருந்து 15 வயது வரையுள்ள குழந்தைகள் பட்டினியால் இறந்து வருகின்றனா்.

புதிய கல்விக் கொள்கையாக தொழில் கல்வி அறிவித்ததன் காரணமாக அவரவா் சோ்ந்த குலத் தொழிலையைக் கற்றுக் கொள்ளவே வழி வகுக்கிறது.

மாறாக சிறுபான்மை இனத்தைச் சேரந்தவா்கள் உயா்கல்வி பயிலவோ அல்லது அறிவியல், இஸ்ரோ விஞ்ஞானியாகவே முடியாமல் தடுக்கப்படுகிறது.

ஆசியாவிலேயே வறுமையின் காரணமாக இந்தியாவில்தான் தற்கொலைகள் அதிகம் நிகழ்ந்துள்ளன. புதிய வேளாண் சட்டத்தால் உண்ணும் உணவை நாம் இழக்க வேண்டி வரும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.