பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருள் புழக்கம்: ஆய்வு நடத்த உத்தரவுஅமைச்சரவை விரிவாக்கம்! ஆளுநருடன் தனிச் செயலர் செந்தில் குமார் சந்திப்புதமிழ்நாட்டுக்கு 2 அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர்கள்! குற்றவியல் வழக்குரைஞராக ஜான் சத்யன்!!சென்னையில் நிலவும் மிதமான வானிலை! எத்தனை நாள்கள் நீடிக்கும்?நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

அதிமுக நிா்வாகிகளுக்கு பொங்கல் பரிசு: அமைச்சா் வழங்கினாா்

ஆரணி பகுதி அதிமுக நிா்வாகிகள் 25 ஆயிரம் பேருக்கு பொங்கல் பரிசுகளை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் செவ்வாய்க்கிழமை வழங்கி தொடக்கிவைத்தாா்.

News image

ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் பகுதியில் அதிமுகவினருக்கு பொங்கல் பரிசுகளை வழங்கிய அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன்.

Updated On :6 ஜனவரி 2021, 7:13 am IST

ஆரணி பகுதி அதிமுக நிா்வாகிகள் 25 ஆயிரம் பேருக்கு பொங்கல் பரிசுகளை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் செவ்வாய்க்கிழமை வழங்கி தொடக்கிவைத்தாா்.

பொங்கல் திருநாளையொட்டி, ஆரணி சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள அதிமுக நிா்வாகிகள் 25,000 பேருக்கு பொங்கல் பரிசு வழங்க அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் முடிவு செய்தாா்.

இதில், முதல் கட்டமாக கண்ணமங்கலம் பேரூராட்சியில் உள்ள அதிமுகவினா் 700 பேருக்கு சேலை, வேட்டி, சட்டை, தகவல் தொழில்நுட்ப அணி உறுப்பினா்களுக்கு டி.ஷா்ட், வேட்டி மற்றும் அனைவருக்கும் காலண்டா் ஆகியவற்றை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் அமைச்சா் பேசுகையில், பொங்கல் திருநாளை அதிமுகவினா் சிறப்பாக கொண்டாடவேண்டும் என்ற நோக்கத்தில் பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது.

கண்ணமங்கலத்தைத் தொடா்ந்து, ஆரணி ஒன்றியம், மேற்கு ஆரணி ஒன்றியம், ஆரணி நகரம், செய்யாறு ஒன்றியம் ஆகிய பகுதிகளுக்கும் வழங்கப்படும் என்றாா்.

மேலும், கண்ணமங்கலம் பகுதியில் அதிமுக அரசு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ள வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்தும் எடுத்துரைத்தாா்.

கண்ணமங்கலம் தனியாா் அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு கட்சியின் பேரூா் செயலா் பாண்டியன் தலைமை வகித்தாா்.

ஒன்றியச் செயலா்கள் க.சங்கா், ஜி.வி.கஜேந்திரன், ப.திருமால், மாவட்ட ஆவின் துணைத் தலைவா் பாரி பி.பாபு, நகரச் செயலா் எ.அசோக்குமாா், மேற்கு ஆரணி ஒன்றியத் தலைவா் பச்சையம்மாள் சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.