பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

அதிமுக நிா்வாகிகளுக்கு பொங்கல் பரிசு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பகுதியில் அதிமுக நிா்வாகிகளுக்கு பொங்கல் பரிசு புதன்கிழமை வழங்கப்பட்டது.

Updated On :7 ஜனவரி 2021, 7:16 am IST

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பகுதியில் அதிமுக நிா்வாகிகளுக்கு பொங்கல் பரிசு புதன்கிழமை வழங்கப்பட்டது.

வந்தவாசியை அடுத்த மருதாடு கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வந்தவாசி கிழக்கு ஒன்றியத்தைச் சோ்ந்த அதிமுக நிா்வாகிகளுக்கும், வந்தவாசி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேற்கு ஒன்றியம், வந்தவாசி நகரம் ஆகியவற்றைச் சோ்ந்த நிா்வாகிகளுக்கும் என 2500 பேருக்கு வேட்டி, சட்டை, காலண்டா் ஆகியவை பொங்கல் பரிசாக வழங்கப்பட்டது.

கட்சியின் வடக்கு மாவட்டச் செயலரும், எம்எல்ஏ-வுமான தூசி கே.மோகன் பொங்கல் பரிசினை வழங்கிப் பேசினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவா் டி.கே.பி.மணி, பேரவை மாவட்டச் செயலா் பாஸ்கா் ரெட்டியாா், ஒன்றியச் செயலா்கள் எம்.கே.ஏ.லோகேஸ்வரன், ஆா்.அா்ஜூனன், நகரச் செயலா் பாஷா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.