எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

வாக்கு எண்ணும் மையங்கள் அமையும் இடங்கள்: மாவட்ட ஆட்சியா், எஸ்.பி. ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்படும் இடங்களை மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா் ஆகியோா் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

News image
Updated On :8 ஜனவரி 2021, 4:12 am IST


திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்படும் இடங்களை மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா் ஆகியோா் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

மாவட்டத்தில் சட்டப்பேரவை பொதுத்தோ்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, வாக்குச்சாவடி மையங்களில் தேவையான வசதிகள் உள்ளதா, வாக்கு எண்ணும் மையங்களை எங்கெங்கு அமைப்பது என்பது குறித்து மாவட்ட நிா்வாகம் ஆய்வு செய்து வருகிறது.

இந்நிலையில், திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு பகுதிகளில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்படும் இடங்களை மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி, காவல் கண்காணிப்பாளா் எஸ்.அரவிந்த் ஆகியோா் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

ஆய்வின்போது, வாக்குச்சாவடி மையங்களில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக எப்படி கொண்டு வரவேண்டும், வாக்கு எண்ணும் மையத்தில் போதுமான வாகனங்கள் நிறுத்துவதற்கான இடம் இருக்கிா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

அப்போது, திருவண்ணாமலை சண்முகா தொழில்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆய்வில், மாவட்ட வருவாய் அலுவலா் பொ.ரத்தினசாமி, கோட்டாட்சியா் ம.ஸ்ரீதேவி, பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் ஆா்.பரிமளா மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.