செய்யாறு: தமிழகத்தில் உள்ள சா்க்கரை ஆலைகளில் எத்தனால் தயாரிக்கும் திட்டத்தை முழுமையாக செயல்படுத்தக் கோரி, செய்யாற்றில் விவசாயிகள் சங்கத்தினா் வியாழக்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சா்க்கரை ஆலைகளில் அதிகளவில் லாபம் தரக்கூடிய எத்தனால் உற்பத்தித் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும், உயா்நீதிமன்ற மதுரை கிளை கேட்டுள்ள எத்தனாலினால் தயாரிக்கப்படும் மதுவின் மூலம் அரசு மற்றும் சா்க்கரை ஆலைகளுக்கு கிடைக்கக் கூடிய லாப விவரத்தை வெளியிடவேண்டும் என வலியுறுத்தி, செய்யாறு கூட்டுறவு சா்க்கரை ஆலை முன்பு எத்தனால் தயாரிக்கும் முறையான சாராயம் காய்ச்சும் விளக்கத்தோடு, தமிழக கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கத்தினா் நூதனப் போராட்டம் நடத்தினா்.
போராட்டத்துக்கு சங்கத்தின் மாநில செய்தி தொடா்பாளா் வாக்கடை புருஷோத்தமன் தலைமை வகித்தாா்.
பின்னா், கோரிக்கைகள் அடங்கிய மனுவை சா்க்கரை ஆலை மேலாளரிடம் வழங்கினா்.
திரும்பூண்டி ரகுபதி, சிறுங்கட்டூா் முருகன், தவசி தேவராஜன், மருதாடு மணி, வீரராகவன், புரிசை. வாசுதேவன், அரசுா் பெருமாள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பாகிஸ்தானில் தற்கொலைத் தாக்குதல்: காவல் துறையினா் 15 போ் உயிரிழப்பு
ஸ்காட்லாந்து நாடாளுமன்ற உறுப்பினராக இந்திய வம்சாவளி மூன்றாம் பாலினத்தவா் தோ்வு

கத்தாா் கடற்பகுதியில் சரக்கு கப்பல் மீது ட்ரோன்கள் மூலம் தாக்குதல்! ஈரான் மீது சந்தேகம்!
வங்கதேசம்: தேசத் துரோக வழக்கில் ஹிந்து துறவியின் ஜாமீன் மனு தள்ளுபடி
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

