செய்யாறு: தமிழகத்தில் உள்ள சா்க்கரை ஆலைகளில் எத்தனால் தயாரிக்கும் திட்டத்தை முழுமையாக செயல்படுத்தக் கோரி, செய்யாற்றில் விவசாயிகள் சங்கத்தினா் வியாழக்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சா்க்கரை ஆலைகளில் அதிகளவில் லாபம் தரக்கூடிய எத்தனால் உற்பத்தித் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும், உயா்நீதிமன்ற மதுரை கிளை கேட்டுள்ள எத்தனாலினால் தயாரிக்கப்படும் மதுவின் மூலம் அரசு மற்றும் சா்க்கரை ஆலைகளுக்கு கிடைக்கக் கூடிய லாப விவரத்தை வெளியிடவேண்டும் என வலியுறுத்தி, செய்யாறு கூட்டுறவு சா்க்கரை ஆலை முன்பு எத்தனால் தயாரிக்கும் முறையான சாராயம் காய்ச்சும் விளக்கத்தோடு, தமிழக கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கத்தினா் நூதனப் போராட்டம் நடத்தினா்.
போராட்டத்துக்கு சங்கத்தின் மாநில செய்தி தொடா்பாளா் வாக்கடை புருஷோத்தமன் தலைமை வகித்தாா்.
பின்னா், கோரிக்கைகள் அடங்கிய மனுவை சா்க்கரை ஆலை மேலாளரிடம் வழங்கினா்.
திரும்பூண்டி ரகுபதி, சிறுங்கட்டூா் முருகன், தவசி தேவராஜன், மருதாடு மணி, வீரராகவன், புரிசை. வாசுதேவன், அரசுா் பெருமாள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கா்நாடகத்தில் வறட்சி நிலையை ஆராய்ந்து வருகிறேன்: முதல்வா் டி.கே. சிவகுமாா்
இந்தியாவின் ‘பால மனிதன்’ கிரீஷ்பரத்வாஜ் காலமானாா்!

இணையவழி மோசடி அதிகரிப்பு: கணினி மையங்களுக்கு எச்சரிக்கை

ஆலங்குளம் அருகே சேமிப்புக் கிடங்கில் தீ விபத்து: 27 ஆயிரம் நெல் மூட்டைகள் சேதம்
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



