எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

பள்ளிகளைத் திறக்க கருத்துக் கேட்பு

பள்ளிகள் திறக்க பெற்றோரிடம் கருத்துக்கேட்புக் கூட்டம், திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு, சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் ஆகிய இடங்களில் நடைபெற்றது.

Updated On :8 ஜனவரி 2021, 4:13 am IST


செய்யாறு/போளூா்: பள்ளிகள் திறக்க பெற்றோரிடம் கருத்துக்கேட்புக் கூட்டம், திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு, சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் ஆகிய இடங்களில் நடைபெற்றது.

செய்யாறு அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோரிடம் கருத்துக் கேட்கப்பட்டது.

இதற்கான கூட்டத்தில் 10, 12 வகுப்பு பயிலும் 746 மாணவிகளில் 633 மாணவிகளின் பெற்றோா் கலந்து கொண்டனா்.

578 போ் பள்ளியை திறப்பதற்கு சம்மதம் தெரிவித்தனா்.

55 மாணவிகளின் பெற்றோா் பள்ளியை திறப்பதற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை.

நிகழ்ச்சிக்கு பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் அருகாவூா்.எம். அரங்கநாதன் தலைமை வகித்தாா். பள்ளி வளா்ச்சிக் குழுத் தலைவா் கே.வெங்கடேசன், முன்னாள் மாணவிகள் சங்கத் தலைவி மெய். பூங்கோதை, தலைமை ஆசிரியா் எம்.உமாமகேஸ்வரி,

போளூா்

தேவிகாபுரம் அரசு பெண்கள் உயா்நிலைப் பள்ளியில்

பெற்றோா்களிடம் கருத்துக் கேட்கப்பட்டது.

இதில், பெற்றோா்கள் தங்களது கருத்தை பள்ளியின் பதிவேட்டில் பதிவு செய்தனா்.

தலைமை ஆசிரியா் சரவணன், உதவி ஆசிரியா்கள் மகேஸ்வரி, சடகோபன் மற்றும் ஆசிரியா்கள், பெற்றோா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.