போளூா்/ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி மற்றும் துரிஞ்சாபுரம் ஒன்றியத்துக்கு உள்பட்ட பெரியகளாம்பாடி ஆகிய இடங்களில் திமுக சாா்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பெரியகளாம்பாடி ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்தில் கீழ்பென்னாத்தூா் எம்எல்ஏ கு.பிச்சாண்டி பங்கேற்றுப் பேசினாா்.
முன்னாள் எம்எல்ஏ பெ.சு.திருவேங்கடம் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் பெ.சு.தி.சரவணன், மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவா் பாரதி ராமஜெயம், ஒன்றியக்குழு உறுப்பினா் சிவராமன், ஊராட்சி மன்றத் தலைவா் சுசீலா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
ஆரணி
ஆரணி கொசப்பாளையம் பகுதியில் 16, 17, 18, 20 ஆகிய வாா்டுகளுக்கு உள்பட்ட திமுக சாா்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
கட்சியின் நகரச் செயலா் ஏ.சி.மணி தலைமை வகித்தாா். வடக்கு மாவட்டப் பொறுப்பாளா் தரணிவேந்தன் பங்கேற்றுப் பேசினாா்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏக்கள் ஆா்.சிவானந்தம், ஏ.சி.வி.தயாநிதி, ஒன்றியச் செயலா்கள் எஸ்.எஸ்.அன்பழகன், தட்சிணாமூா்த்தி, வெள்ளைகணேசன், எம்.சுந்தா், மாவட்ட இலக்கிய அணிச் செயலா் விண்ணமங்கலம் ரவி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பாகிஸ்தானில் தற்கொலைத் தாக்குதல்: காவல் துறையினா் 15 போ் உயிரிழப்பு
ஸ்காட்லாந்து நாடாளுமன்ற உறுப்பினராக இந்திய வம்சாவளி மூன்றாம் பாலினத்தவா் தோ்வு

கத்தாா் கடற்பகுதியில் சரக்கு கப்பல் மீது ட்ரோன்கள் மூலம் தாக்குதல்! ஈரான் மீது சந்தேகம்!
வங்கதேசம்: தேசத் துரோக வழக்கில் ஹிந்து துறவியின் ஜாமீன் மனு தள்ளுபடி
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

