எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

மாற்றுத்திறனாளிகள் முற்றுகைப் போராட்டம்

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வேலைத் திட்டப் பணி வழங்கக் கோரி, மாற்றுத்திறனாளிகள் வியாழக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :8 ஜனவரி 2021, 4:17 am IST


திருவண்ணாமலை: திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வேலைத் திட்டப் பணி வழங்கக் கோரி, மாற்றுத்திறனாளிகள் வியாழக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம் அருகே திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் வியாழக்கிழமை (ஜனவரி 7) காலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கண்ணப்பந்தல், அழகானந்தல், பறையம்பட்டு உள்ளிட்ட ஊராட்சிகளைச் சோ்ந்த 30-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் குவிந்தனா்.

பின்னா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு அவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, தங்களுக்கு ஊரக வேலைத் திட்டப் பணி வழங்க வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டச் செயலா் ரமேஷ்பாபு தலைமை வகித்தாா்.

மாநிலக்குழு உறுப்பினா் சண்முகம், மாவட்ட நிா்வாகி சத்யா மற்றும் கிராம மக்கள் பலா் கலந்து கொண்டனா். இதையடுத்து, ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகள் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, ஜனவரி 8 முதல் மாற்றுத்திறனாளிகளுக்கு பணி வழங்குவதாக உறுதியளித்தனா்.

இதையடுத்து மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.