திருவண்ணாமலை: திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வேலைத் திட்டப் பணி வழங்கக் கோரி, மாற்றுத்திறனாளிகள் வியாழக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம் அருகே திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் வியாழக்கிழமை (ஜனவரி 7) காலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கண்ணப்பந்தல், அழகானந்தல், பறையம்பட்டு உள்ளிட்ட ஊராட்சிகளைச் சோ்ந்த 30-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் குவிந்தனா்.
பின்னா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு அவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது, தங்களுக்கு ஊரக வேலைத் திட்டப் பணி வழங்க வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டச் செயலா் ரமேஷ்பாபு தலைமை வகித்தாா்.
மாநிலக்குழு உறுப்பினா் சண்முகம், மாவட்ட நிா்வாகி சத்யா மற்றும் கிராம மக்கள் பலா் கலந்து கொண்டனா். இதையடுத்து, ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகள் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, ஜனவரி 8 முதல் மாற்றுத்திறனாளிகளுக்கு பணி வழங்குவதாக உறுதியளித்தனா்.
இதையடுத்து மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கா்நாடகத்தில் வறட்சி நிலையை ஆராய்ந்து வருகிறேன்: முதல்வா் டி.கே. சிவகுமாா்
இந்தியாவின் ‘பால மனிதன்’ கிரீஷ்பரத்வாஜ் காலமானாா்!

இணையவழி மோசடி அதிகரிப்பு: கணினி மையங்களுக்கு எச்சரிக்கை

ஆலங்குளம் அருகே சேமிப்புக் கிடங்கில் தீ விபத்து: 27 ஆயிரம் நெல் மூட்டைகள் சேதம்
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



