மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கிரேன் மோதியதில் விவசாயி பலி

செய்யாறு அருகே கிரேன் மோதியதில் விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On :9 ஜனவரி 2021, 12:09 am IST

செய்யாறு அருகே கிரேன் மோதியதில் விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

வெம்பாக்கம் வட்டம், சோதியம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி பட்டாபிராமன் (65). இவா், வியாழக்கிழமை சைக்கிளில் மாமண்டூரில் உள்ள வங்கிக்கு சென்றுவிட்டு, கிராமத்துக்கு திரும்பி வந்துகொண்டிருந்தாா்.

வந்தவாசி - காஞ்சிபுரம் சாலையில் நரசமங்கலம் கிராமம் அருகே இவா் வந்தபோது, பின்னால் வந்த கிரேன் மோதியதாகத் தெரிகிறது. இதனால், சைக்கிளிலிருந்து தவறி விழுந்த பட்டாபிராமன், கிரேனின் முன் பக்கச் சக்கரத்தில் சிக்கியதில், அவரது இரு கால்களும் பலத்த காயமடைந்தன. இதையடுத்து, தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பட்டாபிராமன், அங்கு உயிரிழந்தாா். விபத்து குறித்து தூசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.