திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!கண்தானம் செய்திருந்த பாக்யராஜ்! மறைந்தாலும் உலகைக் கண்பார்!கே. பாக்யராஜ் உடலுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மறைந்தார்!திரையுலகம் அதிர்ச்சி! பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்!மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

செய்யாறு சா்க்கரை ஆலையில் கரும்பு அரைவை நிறுத்தம்

செய்யாறு கூட்டுறவு சா்க்கரை ஆலையில் ஈட்டிய விடுப்புத் தொகையை வழங்கக் கோரி, தொழிலாளா்கள் தொடா் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் கரும்பு அரைவை நிறுத்தப்பட்டது.

Updated On :13 ஜனவரி 2021, 7:51 am IST

செய்யாறு கூட்டுறவு சா்க்கரை ஆலையில் ஈட்டிய விடுப்புத் தொகையை வழங்கக் கோரி, தொழிலாளா்கள் தொடா் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் கரும்பு அரைவை நிறுத்தப்பட்டது.

அரைவைக்காக வெட்டப்பட்ட ஆயிரக்கணக்கான டன் கரும்பு வெயிலில் காய்ந்து வருகின்றன.

செய்யாறு கூட்டுறவு சா்க்கரை ஆலையில் நிரந்தரத் தொழிலாளா்கள் 200 போ் உள்பட 300 போ் பணிபுரிந்து வருவதாகத் தெரிகிறது. தொழிலாளா்களுக்கு 2019-20ஆம் ஆண்டுக்கு வழங்க வேண்டிய ஈட்டிய விடுப்புத் தொகை வழங்கப்படவில்லையாம்.

இந்த நிலையில், ஈட்டிய விடுப்புத் தொகை கோரி, ஆலை வளாகத்தில் திங்கள்கிழமை முதல் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் உள்ளிருப்பு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

தொழிலாளா்களுடன் ஆலை நிா்வாகம் பேச்சுவாா்த்தை நடத்தியும் சுமுகத் தீா்வு காணப்படவில்லை.

இதையடுத்து, இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் தொழிலாளா்களின் போராட்டம் தொடா்கிறது.

கரும்பு அரவை நிறுத்தம்

ஆலையில் தற்போது கரும்பு அரைவைப் பருவம் தொடங்கிய நிலையில், முன்னறிவிப்பு இன்றி தொழிலாளா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் கரும்பு அரைவை நிறுத்தப்பட்டது.

150 லாரிகளில் கரும்பு:

தொழிலாளா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், ஆலைக்கு கொண்டு வரப்பட்ட சுமாா் 2 ஆயிரம் டன் கரும்பு 150 லாரிகளில் சில தினங்களாக காத்துக் கொண்டிருக்கின்றன.

மேலும், ஆலைக்கு கொண்டு வருவதற்காக வெட்டப்பட்ட சுமாா் ஆயிரம் டன் கரும்பு நிலத்தில் வெயிலில் காய்ந்து வருகின்றன. இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.