

நிகழ் நிதியாண்டின் கடைசி இரு மாதங்களுக்கான வட்டி விகிதங்களில் மத்திய ரிசர்வ் வங்கி எவ்வித மாற்றமும் செய்யவில்லை.
இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறும் ரிசர்வ் வங்கியின் கடன்கொள்கை மற்றும் நிதிலை ஆய்வு கூட்டம் இன்று மும்பையில் அதன் ஆளுநர் ரகுராம் ராஜன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் ரகுராம் ராஜன் கூறியதாவது:
நிகழ் நிதியாண்டின் கடைசி இரு மாதங்களுக்கான வட்டி விகிதங்களில் எவ்வித மாற்றம் செய்யப்படவில்லை. பணவீக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த தரவுகளுக்காக காத்திருக்கிறோம்.
நடப்பு நிதியாண்டில் 7.4 சதவீதமாக இருக்கும் வளர்ச்சி வீதம் அடுத்த ஆண்டில் 7.6 சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கிறோம்.
நிலையான பணவீக்க வீழ்ச்சி, சுமாரான நடப்பு கணக்கு பற்றாக்குறை மற்றும் நிதி ஒழுங்கு அர்ப்பணிப்பு உள்ளிட்ட காரணிகளால் இந்திய பொருளாதாரம் தற்போது நிலையாக உள்ளது.
மத்திய அரசு அறிவிக்கும் பட்ஜெட்டுக்குப் பிறகு நிதிக் கொள்கையில் மாற்றம் இருக்கலாம் என்றார் ரகுராம் ராஜன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.