முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

ஏப்ரல் மாதம் மட்டும் ரூ.1 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல்: மத்திய நிதியமைச்சகம் தகவல்

நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் மாதம் மட்டும் ரூ.1 லட்சம் கோடிக்கு நாடு முழுவதும் ஜிஎஸ்டி வசூல் நடைபெற்றுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் செவ்வாய்கிழமை தெரிவித்துள்ளது. 

News image
Updated On :1 மே 2018, 1:14 pm IST

நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் மாதம் மட்டும் ரூ.1 லட்சம் கோடிக்கு நாடு முழுவதும் ஜிஎஸ்டி வசூல் நடைபெற்றுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் செவ்வாய்கிழமை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2018-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மட்டும் மொத்தம் ரூ..1,03,458 கோடி ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது. இதில் (சி) ஜிஎஸ்டி ரூ.18,652 கோடி, (எஸ்) ஜிஎஸ்டி ரூ.25,704 கோடி, ஒருங்கிணைந்த (ஐ) ஜிஎஸ்டி ரூ.50,548 கோடி (இதில், இறக்குமதி மூலம் கிடைத்த ஜிஎஸ்டி ரூ.21,246 கோடி) கூடுதல் வரி (செஸ்) ரூ.8,554 கோடி (இதில், இறக்குமதி மூலம் கிடைத்த ஜிஎஸ்டி ரூ.702 கோடி) வசூலாகியுள்ளது.

இதில் மத்திய மற்றம் மாநில அரசுகளுக்கு (சி) ஜிஎஸ்டி ரூ.32,493 கோடி மற்றும் (எஸ்) ஜிஎஸ்டி ரூ.40,257 கோடி வருவாய் ஏற்பட்டுள்ளது. இது பொருளாதார முன்னேற்றத்தை குறிப்பதாக அமைந்துள்ளது. இருப்பினும் நிதியாண்டின் கடைசி மாதம் என்பதால் பலர் தங்களின் வரி பாக்கிகளை செலுத்தும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே இந்த மாத ஜிஎஸ்டி வசூலை எதிர்கால போக்காக கருத இயலாது என்று தெரிவித்திருந்தது.

முன்னதாக, கடந்த ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்தது. இதன்படி அறிமுகப்படுத்தப்பட்ட முதல் நிதியாண்டில் ரூ.7.41 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலாகியுள்ளதாக நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017 ஜூலை முதல் 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி வரை சராசரியாக மாதம் ரூ.89,000 கோடி ஜிஎஸ்டி வசூலானது. ஆனால் நிதியாண்டின் கடைசி மாதம் மட்டும் கூடுதலாக ரூ.24,000 கோடி ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது.

மொத்தம் வசூலாகியுள்ள ரூ.7.41 லட்சம் கோடியில், ரூ.1.19 லட்சம் கோடி மத்திய (சி) ஜிஎஸ்டி, ரூ.1.72 லட்சம் கோடி மாநில (எஸ்) ஜிஎஸ்டி, ரூ.3.66 லட்சம் கோடி ஒருங்கிணைந்த (ஐ) ஜிஎஸ்டி ஆகும். இதில், இறக்குமதி மூலம் கிடைத்த ஜிஎஸ்டி ரூ.1.73 லட்சம் கோடி ஆகும். மாநிலங்களுக்கு இடையிலான சரக்குப் போக்குவரத்து மற்றும் இறக்குமதிப் பொருள்களுக்கு ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. ரூ.62,021 கோடி கூடுதல் வரி (செஸ்) வசூலாகியுள்ளது. ஜிஎஸ்டி அறிமுகமான முதல் நிதியாண்டில் மாநிலங்களுக்கு ஏற்பட்ட வரி இழப்பீட்டை ஈடு செய்ய மத்திய அரசு ரூ.41,147 கோடி அளித்துள்ளதாக தெரிவித்திருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.