செப்டம்பர் மாதத்தில் ரூ.94 ஆயிரம் கோடி ஜிஎஸ்டி வசூல்!

நடப்பு நிதியாண்டில் செப்டம்பர் மாதம் மட்டும் ரூ.94 ஆயிரம் கோடிக்கு நாடு முழுவதும் ஜிஎஸ்டி வசூல் நடைபெற்றுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. 
செப்டம்பர் மாதத்தில் ரூ.94 ஆயிரம் கோடி ஜிஎஸ்டி வசூல்!
Updated on
1 min read

நடப்பு நிதியாண்டில் செப்டம்பர் மாதம் மட்டும் ரூ.94 ஆயிரம் கோடிக்கு நாடு முழுவதும் ஜிஎஸ்டி வசூல் நடைபெற்றுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2018-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மட்டும் மொத்தம் ரூ.94,442 கோடி ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது. இதில் (சி) ஜிஎஸ்டி ரூ.15,318 கோடி, (எஸ்) ஜிஎஸ்டி ரூ.21,061 கோடி, ஒருங்கிணைந்த (ஐ) ஜிஎஸ்டி ரூ.50,070 கோடி மற்றும் கூடுதல் வரி (செஸ்) ரூ.7,993 கோடி வசூலாகியுள்ளது.

முன்னதாக, ஆகஸ்டு மாதத்தில் மொத்தம் ரூ.93,690 கோடி சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் நடைபெற்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com