நாட்டின் பணவீக்கம் சென்ற டிசம்பர் மாதத்தில் 3.80 சதவீதமாக சரிவைக் கண்டுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு திங்கள்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:
மொத்தவிற்பனை விலை குறியீட்டெண் (டபிள்யூபிஐ) அடிப்படையில் கணக்கிடப்படும் பணவீக்கம் கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 3.80 சதவீதமாக சரிந்துள்ளது. இது, 8 மாதங்களில் காணப்படாத குறைந்தபட்ச அளவாகும்.
இப்பணவீக்கம் 2017-ஆம் ஆண்டு டிசம்பரில் 3.58 சதவீதமாகவும், 2018 நவம்பர் மாதத்தில் 4.64 சதவீதமாகவும் காணப்பட்டன.
எரிபொருள்கள் மற்றும் உணவுப் பொருள்களின் விலை கட்டுக்குள் இருந்ததையடுத்து பணவீக்கம் டிசம்பர் மாதத்தில் இந்த அளவுக்கு குறைந்துள்ளது.
2018 நவம்பரில் 3.31 சதவீதமாக காணப்பட்ட உணவுப் பொருள்களுக்கான பணவீக்கம் டிசம்பரில் 0.07 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. அதேபோன்று, காய்கறிகளின் விலை 26.98 சதவீதமாக அதிகரித்திருந்த நிலையில், டிசம்பரில் இது 17.55 சதவீதம் அளவுக்கு குறைந்துபோனது.
மேலும், எரிபொருள்களுக்கான பணவீக்கம் கடந்த நவம்பரில் 16.28 சதவீதம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், டிசம்பரில் அது பாதியாக குறைந்து 8.38 சதவீதமாக இருந்தது. தனிப்பட்ட முறையில், பெட்ரோல், டீசலுக்கான பணவீக்கம் 8.61 சதவீதத்திலிருந்து சரிந்து 1.57 சதவீதமாக காணப்பட்டது. டிசம்பரில், சமையல் எரிவாயுவிற்கான பணவீக்கம் 6.87 சதவீதம் என்ற அளவில் இருந்தது. உணவுப் பொருள்களைப் பொருத்தவரையில் உருளைக்கிழங்கிற்கான பணவீக்கம் 86.45 சதவீதத்திலிருந்து வீழ்ச்சியடைந்து 48.68 சதவீதமாக காணப்பட்டது.
கடந்த நவம்பரில் வெங்காயத்தின் விலை 47.60 சதவீதம் உயர்ந்திருந்த நிலையில், டிசம்பரில் அது 63.83 சதவீத அளவுக்கு குறைந்துள்ளது.
கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் பணவீக்கம் 3.62 சதவீதமாக இருந்தது. ஆனால், அதற்கு பிறகு 8 மாதங்கள் கழித்து டிசம்பரில் தான் பணவீக்கமானது இந்த அளவுக்கு குறைந்துள்ளது என மத்திய அரசு புள்ளிவிவரத்தில் கூறியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நைஜீரியாவில் ஆயுதக் குழு தாக்குதல்

வட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

அரசுப் பேருந்துகள் மோதல்: மூதாட்டி உயிரிழப்பு

ஜனவரி - மாா்ச் காலாண்டில் தொலைத்தொடா்பு நிறுவனங்களின் வருவாய் ரூ. 1.06 லட்சம் கோடி!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


