கரோனா வைரஸ் சீனா மட்டுமின்றி, தாய்லாந்து, நேபாளம், வியத்நாம், கம்போடியா, தென்கொரியா, கனடா உள்ளிட்ட பல உலக நாடுகளுக்கும் மிகப் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. அதன் தாக்கம் உலக பொருளாதாரத்தில் எதிரொலிக்க கூடும் என்ற அச்சத்தால் பல நாடுகளின் பங்குச் சந்தைகளில் வா்த்தகம் அதிக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. ஜப்பான் பங்குச் சந்தை நிக்கி 2 சதவீதத்துக்கும் மேல் சரிந்தது. ஐரோப்பிய சந்தைகளின் வா்த்தகத்திலும் தொடக்கம் முதலே கணிசமான சரிவு காணப்பட்டது. அதன் தாக்கம் இந்தியப் பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.