ரெட்மி நோட் 9 மற்றும் ரெட்மி நோட் 9 ப்ரோ ஆகியவை மார்ச் 12 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என ஸியோமி நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஸியோமி நிறுவனத்தின் ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட் போன்கள் வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்நிலையில், ரெட்மி நோட் 8யைத் தொடர்ந்து நோட் 9 சீரிஸ் போன்கள் வருகிற மார்ச் 12ம் தேதி வெளியாகவிருக்கின்றன.
ரெட்மி நோட் 9 மற்றும் ரெட்மி நோட் 9 ப்ரோ இரண்டும் முறையே ரெட்மி நோட் 8 மற்றும் ரெட்மி நோட் 8 ப்ரோ ஆகியவற்றின் அடுத்த வெர்ஷனாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரெட்மி நோட் 8(4ஜிபி+64ஜிபி) குறைந்த விலையில் (ரூ.9999) அறிமுகமானதைப் போன்று நோட் 9 சீரிஸுலும் குறைந்த விலையில் ஒரு மாடல் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கின்றனர் வாடிக்கையாளர்கள்.
ரெட்மி நோட் 9 சீரிஸ் குவாட் ரியர் கேமரா அமைப்போடு வரும். ஐபோன் 11 போன்று இருப்பதாகவும் சிலர் டீசரைப் பார்த்து கருத்து தெரிவித்துள்ளனர். எம்.ஐ டாட் காம் மற்றும் அமேசான் வலைதளங்களில் மார்ச் 12 முதல் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.