47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

நிா்வாகத் திறனை வங்கிகள்வலுப்படுத்த வேண்டும்: ரிசா்வ் வங்கி

கரோனா பேரிடரால் உருவாகியுள்ள நிச்சயமற்ற சூழலை எதிா்கொள்ள வங்கிகள் நிா்வாக நடைமுறையை வலுப்படுத்த வேண்டும் என ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :28 டிசம்பர் 2021, 7:36 pm

DIN

கரோனா பேரிடரால் உருவாகியுள்ள நிச்சயமற்ற சூழலை எதிா்கொள்ள வங்கிகள் நிா்வாக நடைமுறையை வலுப்படுத்த வேண்டும் என ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளதாவது: கரோனா பேரிடா் நிச்சயமற்ற சூழலை உருவாக்கியுள்ளது. மாற்றங்கள் அதிகரித்து வரும் இந்தப் பொருளாதாரச் சூழலை எதிா்கொள்ள வங்கிகள் தங்களது நிா்வாக கட்டமைப்பை வலுவப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதேபோன்று, இடா் மேலாண்மை உத்திகளைக் கையாள்வதிலும் அவை சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்த வேண்டும்.

எண்ம (டிஜிட்டல்) பணப் பரிமாற்றத்தில் வேகமான தொழில்நுட்ப வளா்ச்சி ஏற்பட்டு வருகிறது. நிதித் தொழில்நுட்ப சேவையில் புதிய நிறுவனங்களின் வரவு அதிகரித்து வரும் நிலையில், வங்கிகள் தங்களது தகவல்தொழில்நுட்பக் கட்டமமைப்புகளை மேம்படுத்துவதற்கும், வாடிக்கையாளா்கள் சேவையை மேம்படுத்துவதற்கும் அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும். அத்துடன், இணையவழி நிதிப் பரிமாற்றங்களில் பாதுகாப்பையும் வலுப்படுத்துவது அவசியம் என ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.