பங்குச்சந்தை வணிகம் 2-வது நாளாக சரிவுடன் நிறைவு

வர்த்தக நேர முடிவில் பங்குச்சந்தை வணிகம் 2-வது நாளாக இன்றும் (ஜூன் 29) சரிவுடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் 185 புள்ளிகள் சரிவடைந்தன.
பங்குச்சந்தை வணிகம் 2-வது நாளாக சரிவுடன் நிறைவு
பங்குச்சந்தை வணிகம் 2-வது நாளாக சரிவுடன் நிறைவு
Updated on
1 min read

வர்த்தக நேர முடிவில் பங்குச்சந்தை வணிகம் 2-வது நாளாக இன்றும் (ஜூன் 29) சரிவுடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் 185 புள்ளிகள் சரிவடைந்தன.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 185.93 புள்ளிகள் சரிந்து 52,549.66 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவுபெற்றது. இது மொத்த வர்த்தகத்தில் 0.35 சதவிகிதம் சரிவாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 66.25  புள்ளிகள் சரிந்து 15,748.45 புள்ளிகளாக வர்த்தகம் முடிவடைந்தது. மொத்த வர்த்தகத்தில் இது 0.42 சதவிகிதம் சரிவாகும்.

சென்செக்ஸ் பட்டியல் உள்ள முதல் 30 தர பங்குகளில் 12 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே உயர்வுடன் முடிவடைந்தது. ஏனைய 18 நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்பட்டன.

அதிக பட்சமாக கோட்டாக் வங்கியின் பங்குகள் 1.56 சதவிகிதமும், ஐசிஐசிஐ வங்கி 1.52 சதவிகிதமும், எம்&எம் 1.49 சதவிகிதமும், டெக் மஹிந்திரா 1.47 சதவிகிதமும் சரிவடைந்தன.

பவர் கிரிட் 1.75 சதவிகிதமும், எச்.யு.எல். 1.36 சதவிகிதமும், என்.டி.பி.சி. 1.25 சதவிகிதமும் உயர்ந்து காணப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com