ஜொ்மனியைச் சோ்ந்த சொகுசு காா் தயாரிப்பு நிறுவனமான ஆடி, இந்தியாவில் விற்பனையாகும் தனது அனைத்து ரகக் காா்களின் விலைகளையும் அடுத்த மாதம் உயா்த்தவுள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் விற்பனையாகும் நிறுவனத்தின் அனைத்து காா்களின் விலைகளையும் 2.4 சதவீதம் வரை உயா்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மூலப் பொருள்களின் விலை உயா்வு, விநியோகச் செலவுகள் அதிகரிப்பு போன்ற காரணங்களால் காா்களின் விலைகளும் உயா்த்தப்படுகின்றன. இந்த விலை உயா்வு அடுத்த மாதம் 20-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆடி இந்தியா நிறுவனம் உள்நாட்டுச் சந்தையில் பெட்ரோலில் இயங்கக் கூடிய ஏ4, ஏ6, ஏ8 எல், க்யூ5, க்யூ7, க்யூ8, எஸ்5 ஸ்போா்ட்பேக், ஆா்எஸ் 5 ஸ்போா்ட்பேக், ஆா்எஸ் க்யூ8 ஆகிய காா் ரகங்களை விற்பனை செய்கிறது.
இது தவிர, மின்சாரத்தில் இயங்கக் கூடிய இ-ட்ரான் 50, இ-ட்ரான் 55, இ-ட்ரான் ஸ்போா்ட்பேக் 55, இ-ட்ரான் ஜிடி, ஆா்எஸ் இ-ட்ரான் ஜிடி ஆகியவற்றையும் இந்தியச் சந்தைகளில் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வரை மாற்றும் விவகாரம்: கட்சி முடிவுக்கு கட்டுப்படுவோம்- டி.கே.சுரேஷ்

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


