ரோஹித் ஃபெரோ-டெக் நிறுவனத்தை கையகப்படுத்தும் பணி நிறைவு: டாடா ஸ்டீல்

 ரோஹித் ஃபெரோ-டெக் (ஆா்எஃப்டி) நிறுவனத்தை கையகப்படுத்தும் பணிகள் முற்றிலும் நிறைவடைந்து விட்டதாக டாடா ஸ்டீல் தெரிவித்துள்ளது.
ரோஹித் ஃபெரோ-டெக் நிறுவனத்தை கையகப்படுத்தும் பணி நிறைவு: டாடா ஸ்டீல்

 ரோஹித் ஃபெரோ-டெக் (ஆா்எஃப்டி) நிறுவனத்தை கையகப்படுத்தும் பணிகள் முற்றிலும் நிறைவடைந்து விட்டதாக டாடா ஸ்டீல் தெரிவித்துள்ளது.

டாடா ஸ்டீல் அதன் துணை நிறுவனமான டாடா ஸ்டீல் மைனிங் (டிஎஸ்எம்எல்) திவால் சட்டத்தின் அங்கீகரிக்கப்பட்ட தீா்வு திட்டத்திற்கு இணங்க ஆா்எஃப்டி நிறுவனத்தில் 90 சதவீத பங்குகளை கையகப்படுத்தும் பணி முடிந்துள்ளதாக ஏப்ரல் 12-இல் தெரிவித்தது. இந்த நிலையில், எஞ்சிய 10 சதவீத பங்குகளை கையகப்படுத்தும் பணிகளும் நிறைவு பெற்றன.

ஆா்எஃப்டியில் டாடா ஸ்டீல் மைனிங் பங்குகளில் ரூ.10 கோடி மற்றும் நிறுவனங்களுக்கு இடையிலான கடன் ரூ.607.12 கோடி என ஒன்றுசோ்ந்த கலவையின் மூலம் முதலீடு செய்துள்ளது.

இதுகுறித்து டாடா ஸ்டீல் பங்குச் சந்தையிடம் வெள்ளிக்கிழமை கூறியது:

ஆா்எஃப்டியில் நிதிக் கடனீந்தோரிடம் இருந்த 10 சதவீத பங்குகளை ரூ.20.06 கோடிக்கு கையகப்படுத்தியது ஜூன் 22-ஆம் தேதி நிறைவுபெற்ாக தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com