47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஆங்கர் முதலீட்டாளர்கள் மூலம் ரூ.5,627 கோடியைத் திரட்டியது எல்ஐசி

ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியின் ஆங்கர் முதலீட்டாளர்களின் பங்குகள் முழுமையாக விற்பனை செய்யப்பட்டது.

News image
Updated On :3 மே 2022, 6:30 am

DIN

ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியின் ஆங்கர் முதலீட்டாளர்களின் பங்குகள் முழுமையாக விற்பனை செய்யப்பட்டது.

எல்ஐசி மூலம் ரூ.21,000 கோடி நிதி திரட்டும் முயற்சியில் இருக்கும் மத்திய அரசு எல்ஐசியில் உள்ள 22,13,74,920 பங்குகளை ஒரு பங்கின் விலை ரூ.902 முதல் ரூ.949 என்கிற அடிப்படையில்  விற்பனை செய்கிறது.

அதன் முதல்கட்டமாக பொதுப் பங்கிற்கு முன்  ஆங்கர் முதலீட்டாளர்களுக்கான பங்குகளை முழுமையாக விற்பனை செய்துள்ளது, இதன் மூலம் ரூ.5,627 கோடி திரட்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மீதமுள்ள தொகையைத் திரட்ட எல்ஐசி பொதுப் பங்குகள் வெளியீடு நாளை மே 4-ஆம் தேதி முதல் மே 9-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

முன்னதாக கடந்த பிப்ரவரியில் மத்திய அரசு 5 சதவீத பங்கு அல்லது ரூ.31.6 கோடி பங்கை விற்பனை செய்ய முடிவெடுத்து, அதற்கான வரைவு அறிக்கைகளை செபியிடம் தாக்கல் செய்திருந்தது. ஆனால், உக்ரைன்- ரஷியா போரால் சந்தையில் காணப்பட்ட நிலையற்ற தன்மை காரணமாக பொதுப் பங்கு விநியோக திட்டத்தில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், பங்கு வெளியீட்டு அளவை 5 சதவீதத்திலிருந்து 3.5 சதவீதமாக கடந்த வாரம் மத்திய அரசு குறைத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.