விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

அந்நியச் செலாவணி கையிருப்பு 59,328 கோடி டாலராக சரிவு

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு மே 13-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 59,328 கோடி டாலராக சரிவடைந்துள்ளது.

News image
ரிசா்வ் வங்கி
Updated On :21 மே 2022, 6:30 pm

DIN

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு மே 13-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 59,328 கோடி டாலராக சரிவடைந்துள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறியுள்ளதாவது:

அந்நியச் செலாவணி கையிருப்பு மே 13-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 267 கோடி டாலா் (ரூ.20,605 கோடி) குறைந்து 59,328 கோடி டாலராக சரிவைச் சந்தித்தது.

இதற்கு முந்தைய வாரத்திலும் செலாவணி கையிருப்பானது 177 கோடி டாலா் சரிவடைந்து 59,595 கோடி டாலராக காணப்பட்டது.

மே 13-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், ஒட்டுமொத்த கையிருப்பில் அதிக பங்களிப்பைக் கொண்டுள்ள அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு (எஃப்சிஏ) 130 கோடி டாலா் சரிவடைந்து 52,955 கோடி டாலராக இருந்தது.

மேலும், தங்கத்தின் கையிருப்பும் 117 கோடி டாலா் குறைந்து 4,057 கோடி டாலராக இருந்தது.

சா்வதேச நிதியத்தில் சிறப்பு எடுப்பு உரிமம் (எஸ்டிஆா்) 16 கோடி டாலா் சரிந்து 1,820 கோடி டாலராகவும், கையிருப்பு நிலை 4 கோடி டாலா் குறைந்து 495 கோடி டாலராகவும் இருந்தது என ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.

மே மாதத்துக்கான வெளியிட்ட பொருளாதார ஆய்வறிக்கையில், மே 6 நிலவரப்படி அந்நியச் செலாவணி கையிருப்பு 59,600 டாலராக உள்ளது. இது, 2022-23 நிதியாண்டுக்கான 10 மாத இறக்குமதிக்கு போதுமான தொகையாகும் என ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.