விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

2.5 கோடி கார்களை தயாரித்து மாருதி சுஸுகி சாதனை

இந்தியாவில் மாருதி சுஸுகி இதுவரை 2.5 கோடி கார்களை தயாரித்து சாதனை படைத்துள்ளது.

News image
Updated On :3 நவம்பர் 2022, 10:31 am

இந்தியாவில் மாருதி சுஸுகி இதுவரை 2.5 கோடி கார்களை தயாரித்து சாதனை படைத்துள்ளது.

இந்தியாவில் கடந்த 1983 ஆம் ஆண்டு ஹரியாணா மாநிலம் குருகிராமில் மாருதி சுஸுகி நிறுவனம் தனது முதலாவது ஆலையை அமைத்தது. அங்கு முதல் மாடலாக மாருதி 800 கார் தயாரிக்கப்பட்டு தனிநபர் விற்பனைக்கு வந்தது.

அதனைத் தொடர்ந்து, மாருதி சுஸுகி 16 மாடல்களில் கார்களை தயாரித்து வருகிறது. தற்போது, இந்தியா முழுக்க கார்கள் விற்பனையில் மாருதி தனக்கென தனி வாடிக்கையாளர்களையும் நம்பிக்கையும் பெற்றுள்ளது.

இந்நிலையில், கடந்த 40 ஆண்டுகளில் இதுவரை மாருதி சுஸுகி நிறுவனம் 2.5 கோடி கார்களை உற்பத்தி செய்துள்ளதாக மாருதி சுஸுகி நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான ஹிசாஷி டேக்யூச்சி தெரிவித்துள்ளார்.

கடந்த அக்டோபா் மாதத்தில் மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் மொத்த விற்பனை 21 சதவீதம் அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.