ஐபோன் பயனர்கள் வருகிற டிசம்பர் மாதம் 5ஜி மென்பொருள் தொழில்நுட்பத்தைப் பெறுவார்கள் என ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் 5ஜி சேவையை பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் தொடக்கிவைத்தார். ஜியோ, ஏர்டெல், வோடபோன் - ஐடியா நிறுவனங்கள் 5ஜி-யை ஏலத்தில் எடுத்துள்ளன. இதன்படி மெட்ரோ நகரங்களில் 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் பயனர்களுக்கு விரைவில் 5ஜி மென்பொருள் சேவையை தரவுள்ளது.
வருகிற டிசம்பர் மாதம் ஐபோன் 14, ஐபோன் 13, ஐபோன் 12 மற்றும் ஐபோன் SE (third generation) மாடல்களைப் பயன்படுத்துபவர்கள் 5ஜி மென்பொருள் அப்டேட்டை பெறுவார்கள் என்றும் படிப்படியாக மற்ற மாடல் போன்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 5ஜி சேவைகளை முக்கிய பெருநகரங்களில் படிப்படியாக அறிமுகப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் தேரோட்டம்!
கேரளம்: பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக வங்கதேச பெண்கள் கைது

கோடை வெப்பத்தால் பாதிக்கப்பட்டவருக்கு எப்படி உதவ வேண்டும்?

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


