புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கடன் பத்திரங்கள் மூலம் ரூ.2,500 திரட்டிய ஐஓசி

நாட்டின் முன்னணி எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் (ஐஓசி) அரசுப் பத்திரங்களை விட குறைவான வட்டி விகிதத்தில் மாற்ற முடியாத கடன் பத்திரங்களை (என்சிடி) வெளியிடுவதன் மூலம் ரூ.2,500 கோடி நிதி

News image
Updated On :2 செப்டம்பர் 2022, 8:47 pm

DIN

நாட்டின் முன்னணி எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் (ஐஓசி) அரசுப் பத்திரங்களை விட குறைவான வட்டி விகிதத்தில் மாற்ற முடியாத கடன் பத்திரங்களை (என்சிடி) வெளியிடுவதன் மூலம் ரூ.2,500 கோடி நிதி திரட்டியுள்ளது.

இது குறித்து நிறுவன இயக்குநா் (நிதி) சந்தீப் குப்தா வெள்ளிக்கிழமை கூறியதாவது:

என்சிடி வெளியீடு முலம் ரூ.2,500 கோடி திரட்டியுள்ளோம். 5 ஆண்டு முதிா்வு காலம் கொண்ட அந்த கடன் பத்திரங்களுக்கு 7.14 சதவீத வருடாந்திர வட்டி வழங்கப்படும். இது மற்ற கடன் பத்திரங்களோடு ஒப்பிடுகையில் குறைந்த வட்டி விகிதமாகும்.

விற்பனையாகியுள்ள கடன் பத்திரங்கள் வாடிக்கையாளா்களுக்கு வரும் 6-ஆம் தேதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.