பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

'பிளின்கிட்'நிறுவனத்தை வாங்கிய 'சொமேட்டோ': டெலிவரியில் புதிய வேகம்!

சொமேட்டோ நிறுவனம் பிளின்கிட் என்ற உணவு டெலிவரி நிறுவனத்தை ஏலத்தில் எடுத்துள்ளது. இதனால் சொமேட்டோ நிறுவனத்தின் பங்குகள் பங்குச்சந்தைகளில் உயர்ந்துள்ளன. 

'பிளின்கிட்' உணவு டெலிவரி நிறுவனத்தை வாங்கிய 'சொமேட்டோ'

Published On :

சொமேட்டோ நிறுவனம் பிளின்கிட் என்ற உணவு டெலிவரி நிறுவனத்தை ஏலத்தில் எடுத்துள்ளது. இதனால் சொமேட்டோ நிறுவனத்தின் பங்குகள் பங்குச்சந்தைகளில் உயர்ந்துள்ளன. 

பிளின்கிட் என்ற இந்தியாவைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம், காய்கறி மற்றும் உணவுகளை வீடுகளுக்குகொண்டு சென்று சேர்க்கும் பணியைச் செய்து வந்தது. 

இதனிடயே அந்த நிறுவனத்தில் பங்குகள் ஏலத்திற்கு வந்த நிலையில், அதனை சொமேட்டோ நிறுவனம் ரூ.4,447 கோடி மதிப்பில் ஏலத்தில் எடுத்தது. டெலிவரி செய்யும் வேகத்தை அதிகரிக்கும் பொருட்டு சொமேட்டோ இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

அதன் விளைவாக பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளான இன்று (ஜூன் 27) சொமேட்டொ நிறுவனத்தின் பங்குகள் 4 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 

பிளிங்கிட் நிறுவனம் கடந்த மே மாதத்தில் மட்டும் 79 லட்சம் ஆர்டர்களை செய்துள்ளது. இது சொமேட்டோ நிறுவனத்தின் விகிதத்தில் 16 சதவிகிதமாகும். அதாவது சொமேட்டோ நிறுவனம் ஆயிரம் நகரங்களில் தங்களது சேவைகளை வழங்குகிறது எனில், பிளிங்கிட் நிறுவனம் 15 நகரங்களில் தனது சேவையை வழங்கி வருவதற்கு சமம்.

மேலும், பிளிங்கிட் நிறுவனம் ஒரு ஆர்டரின் மதிப்பு ரூ.509 வரை வசூலிக்கிறது. இது சொமேட்டோ நிறுவனத்தின் ஒரு ஆர்டர் மதிப்பை விட 28 சதவிகிதம் அதிகமாகும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.