மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி புள்ளிகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகின்றன.
பங்குச்சந்தைகள் இன்று ஏற்றத்துடன் தொடங்கின. பின்னர் இறக்கம் கண்ட நிலையில் தற்போது ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.
பிற்பகல் 12.01 மணி நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 296.87 புள்ளிகள் உயர்ந்து 57,444.19 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது. இன்று காலை 57,312.49 என்ற சென்செக்ஸ் புள்ளிகளுடன் பங்குச்சந்தை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
அதுபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 85.15 புள்ளிகள் உயர்ந்து 17,068.70 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இதையும் படிக்க | காங். தேர்தலில் கார்கேவுக்கு சோனியா காந்தி ஆதரவா?