பங்குச்சந்தை ஏற்றம்: மீண்டும் 60,000 புள்ளிகளைக் கடந்த சென்செக்ஸ்!

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 600 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது.  
பங்குச்சந்தை ஏற்றம்: மீண்டும் 60,000 புள்ளிகளைக் கடந்த சென்செக்ஸ்!

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 600 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது.  

வாரத்தின் முதல்நாளான இன்று பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கியுள்ளன.  கடந்த வெள்ளிக்கிழமை 59,959.85 என்ற புள்ளிகளுடன் நிறைவுற்ற மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 60,000 புள்ளிகளைக் கடந்தது. 

இன்று காலை 60,246.96 புள்ளிகளில் தொடங்கி பிற்பகல் 1.35 மணிக்கு 659.21 புள்ளிகள் அதிகரித்து 60,619.06 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதுபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 181.70 புள்ளிகள் உயர்ந்து 17,968.50 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com