தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவு

வாரத்தின் முதல் நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. 

News image
கோப்புப் படம்
Updated On :27 பிப்ரவரி 2023, 6:00 am

DIN

வாரத்தின் முதல் நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. 

இதன்படி மும்பை பங்குச்சந்தை குறியீட்டென் சென்செக்ஸ் 465 புள்ளிகள் குறைந்து 58,998 புள்ளிகளில் வர்த்தமாகிறது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 145 புள்ளிகள் குறைந்து 17,319 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. 

அதேசமயம் என்டிபிசி 1.11, அதானி போர்ட்ஸ் 0.75, கோடாக் பேங்க் 0.66, பவர் க்ரீடு 0.56 சதவீதம் உள்ளிட்ட பங்குகள் உயர்வுடனும், அதானி என்டர்பிரைசஸ், பஜாஜ் ஆட்டோ, யுபிஎல், இன்ஃபி, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட பங்குகள் சரிவுடனும் காணப்பட்டன. 

மேலும் அதானி குழுமத்தை சேர்ந்த நிறுவனங்களின் பங்குகள் இன்றும் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகின்றன. ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவன அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து அதானி குழும பங்குகள் கடும் சரிவைச் சந்தித்து வருகின்றன.

ஒரு மாதமாக அதானி குழும பங்குகள் தொடர் வீழ்ச்சியால் உலக கோடீஸ்வரர் பட்டியலில் அதானி தற்போது 35ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.