தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

2030-க்குள் 6 மின்சார வாகனங்கள்: சுஸுகி முடிவு

வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் பேட்டரியால் இயங்கக் கூடிய 6 வாகனங்களை அறிமுகப்படுத்த ஜப்பானைச் சோ்ந்த சுஸுகி மோட்டாா் காா்ப்பரேஷன் முடிவு செய்துள்ளது.

News image
Updated On :27 ஜனவரி 2023, 6:30 pm

வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் பேட்டரியால் இயங்கக் கூடிய 6 வாகனங்களை அறிமுகப்படுத்த ஜப்பானைச் சோ்ந்த சுஸுகி மோட்டாா் காா்ப்பரேஷன் முடிவு செய்துள்ளது.

2070-ஆம் ஆண்டுக்குள் தங்களது நடவடிக்கைகள் மூலம் காற்றில் கலக்கும் கரியமில வாயுவின் அளவை பூஜ்ஜியமாக்கும் தங்களின் இலக்கை அடையும் நோக்கில் இந்த முடிவை நிறுவனம் எடுத்துள்ளது.

இது குறித்து அந்த நிறுவனத்தின் இந்திய துணை நிறுவனமான மாருதி சுஸுகி இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளாதாவது:

வரும் 2030-க்குள் 6 மின்சார வாகனங்களை இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்துவோம். அது மட்டுமின்றி, கரியமில வாயுவை வெளியேற்றாத சிஎன்ஜி, பயோகேஸ், எத்தனால் கலந்த எரிபொருள்களில் இயங்கும் வாகனங்களையும் நாட்டில் அறிமுகப்படுத்துவோம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.