வாரத்தின் முதல் நாளான இன்று(திங்கள்கிழமை) பங்குச்சந்தை ஏற்றத்துடன் முடிந்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை 64,363.78 என்ற புள்ளிகளுடன் நிறைவுற்ற மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று காலை 64,835.23 என்ற புள்ளிகளில் தொடங்கியது.
வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் 594.91 புள்ளிகள் உயர்ந்து 64,958.69 என்ற புள்ளிகளில் நிறைவுற்றது.
அதுபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 181.15 புள்ளிகள் உயர்ந்து 19,411.75 புள்ளிகளில் முடிந்தது.
டிசிஎஸ், எல்&டி, டாடா ஸ்டீல், பவர் கிரிட், ஏசியன் பெயிண்ட்ஸ், எம்&எம் உள்ளிட்ட பெரும்பாலான நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தன.
டைட்டன், டாடா மோட்டார்ஸ், ஹிந்துஸ்தான் லீவர் உள்ளிட்ட நிறுவனங்கள் சரிவைச் சந்தித்தன.
இதையும் படிக்க | தில்லியில் சக்திவாய்ந்த நில அதிர்வு! பீதியில் மக்கள்