மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

உயர்வுடன் முடிந்த பங்குச்சந்தை!

வாரத்தின் இரண்டாவது நாளான இன்று (அக். 10) பங்குச்சந்தை சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வுடன் நிறைவடைந்தது. 

News image

கோப்புப் படம்

Updated On :10 அக்டோபர் 2023, 12:49 pm

DIN


வாரத்தின் இரண்டாவது நாளான இன்று (அக். 10) பங்குச்சந்தை சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வுடன் நிறைவடைந்தது. 

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், பல்வேறு ஏற்ற இறக்கங்களுக்குப் பிறகு மாலையில், 566 புள்ளிகள் உயர்ந்து 66,079.36 ஆக நிறைவு பெற்றது. இது 0.73 சதவிகிதம் உயர்வாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 177 புள்ளிகள் உயர்ந்து 19,689 புள்ளிகளான நிறைவு பெற்றது. இது 0.91 சதவிகிதம் உயர்வாகும். 

பங்குச்சந்தை குறியீட்டிலுள்ள 30 நிறுவனங்களில் 27 நிறுவனங்கள் ஏற்றம் கண்டன. இதில் அதிகபட்சமாக பார்தி ஏர்டெல் 2.89 சதவிகிதமும், கோட்டாக் வங்கி 2.15 சதவிகிதமும், டாடா மோட்டார்ஸ் 2.13 சதவிகிதமும், ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல் 2.09 சதவிகிதமும், எம்&எம் நிறுவனம் 1.50 சதவிகிதமும் உயர்வுடன் காணப்பட்டன. 

இதேபோன்று ஏசியன் பெயிண்ட்ஸ், டைட்டன் கம்பெனி, டிசிஎஸ் நிறுவனங்களின் பங்குகள் சரிந்து எதிர்மறை குறியீட்டுடன் முடிவடைந்தன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.