இறக்கத்துடன் முடிந்த பங்குச்சந்தை! இன்றைய நிலவரம்

பங்குச்சந்தை நேற்று ஏற்றம் கண்ட நிலையில் இன்று இறக்கத்துடன் முடிந்துள்ளது. 
கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

பங்குச்சந்தை நேற்று ஏற்றம் கண்ட நிலையில் இன்று இறக்கத்துடன் முடிந்துள்ளது. 

நேற்று(திங்கள்கிழமை) 64,112.65 என்ற புள்ளிகளுடன் நிறைவுற்ற மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று(செவ்வாய்க்கிழமை) காலை 64,449.65 என்ற புள்ளிகளில் தொடங்கியது. 

வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் 237.72 புள்ளிகள் குறைந்து 63,874.93 என்ற புள்ளிகளில் நிறைவுற்றது. 

அதுபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 61.30 புள்ளிகள் குறைந்து 19,079.60 புள்ளிகளில் முடிந்தது.

ஏசியன் பெயிண்ட்ஸ், டைட்டன், ஹெச்சிஎல் டெக், என்டிபிசி, பவர் கிரிட், விப்ரோ, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், எல்&டி, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தன.

பாரதி ஏர்டெல், ஐடிசி, டாடா ஸ்டீல், எம் & எம், சன் பார்மா, டிசிஎஸ், ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இன்று சரிவைச் சந்தித்தன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com