பங்குச்சந்தை ஏற்றம்: சென்செக்ஸ் 700 புள்ளிகள் உயர்வு!

வாரத்தின் முதல் நாளான இன்று பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கி ஏற்றத்துடன் முடிந்துள்ளன. 
பங்குச்சந்தை ஏற்றம்: சென்செக்ஸ் 700 புள்ளிகள் உயர்வு!
Updated on
1 min read

வாரத்தின் முதல் நாளான இன்று பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கி ஏற்றத்துடன் முடிந்துள்ளன. 

கடந்த வெள்ளிக்கிழமை 61,054.29 என்ற புள்ளிகளுடன் நிறைவுற்ற மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று(திங்கள்கிழமை) தொடக்கத்திலேயே ஏற்றம் கண்டது. 

இன்று வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 709.96 புள்ளிகள் அதிகரித்து 61,764.25 புள்ளிகளில் நிறைவு பெற்றது.

அதுபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 195.40 புள்ளிகள் உயர்ந்து 18,264.40 புள்ளிகளில் வர்த்தகமானது. 

இண்டஸ்இண்ட் வங்கி, டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டன. அதேநேரத்தில் ஓஎன்ஜிசி, கோல் இந்தியா, அதானி எண்டர்பிரைசஸ், சன் பார்மா, டாக்டர் ரெட்டி மற்றும் பிரிட்டானியா ஆகிய நிறுவனங்கள் இறக்கத்தை சந்தித்தன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com