
கோப்புப்படம்
வாரத்தின் கடைசி நாளான பங்குச்சந்தைகள் இன்று ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.
நேற்று(வியாழக்கிழமை) 61,872.62 என்ற புள்ளிகளுடன் நிறைவுற்ற மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று(வெள்ளிக்கிழமை ) தொடக்கத்திலேயே ஏற்றம் கண்டது.
காலை 11.48 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 372.06 புள்ளிகள் அதிகரித்து 62,244.68 புள்ளிகளில் வர்க்கமாகி வருகிறது.
அதுபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 108.90 புள்ளிகள் உயர்ந்து 18,430.05 புள்ளிகளில் உள்ளது.
ரிலையன்ஸ், மாருதி, டெக் மஹிந்திரா, யுபிஎல், டாடா நுகர்வோர் தயாரிப்புகள் மற்றும் விப்ரோ ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.
ஓஎன்ஜிசி, கிராசிம், பவர்கிரிட், சன் பார்மா, ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட நிறுவனங்கள் இறக்கத்தை சந்தித்துள்ளன.
இதையும் படிக்க | ஐடி ரெய்டு: பெண் அதிகாரியிடம் திமுகவினர் வாக்குவாதம்!