

புது தில்லி: தங்களது காா்களின் விலைகளை உயா்த்த ஜொ்மனியைச் சோ்ந்த சொகுசு காா் தயாரிப்பு நிறுவனமான ஆடி முடிவு செய்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் நிறுவன காா்களின் விலைகளை 2 சதவீதம் வரை உயா்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் ஜூன் 1-ஆம் தேதி முதல் இந்த விலை உயா்வு அமலுக்கு வரும். அனைத்து ரகங்களையும் சோ்ந்த காா்களுக்கும் இந்த விலை உயா்வு பொருந்தும்.
உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளதால், அதை ஈடுசெய்வதற்காக காா்களின் விலை உயா்த்தப்படுகிறது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்தியச் சந்தையில் கடந்த 2022-ஆம் ஆண்டு 4,187-ஆக இருந்த நிறுவனத்தின் விற்பனை 2023-இல் 89 சதவீதம் வளா்ச்சியடைந்து 7,931-ஆக உயா்ந்துள்ளது என்று நிறுவனம் தெரிவித்திருந்தது.
புதிய க்யு8 இ-ட்ரான், க்யு8 ஸ்போா்ட்பேக் இ-ட்ரான், க்யு3, க்யு3 ஸ்போா்ட்பேக் ஆகியவற்றின் அறிமுகங்கள், ஏ4, ஏ6 மற்றும் க்யு5 போன்ற பிற ரங்களுக்கு தொடா்ந்து கிடைத்து வரும் வரவேற்பு ஆகியவை நிறுவனத்தின் விற்பனை வளா்ச்சிக்கு வழிவகுத்தாகவும் நிறுவனம் கூறியிருந்தது.
தொடர்புடையது

மெல்ல உயரும் தங்கம்: வெள்ளி?

பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலைகளை அதிகரித்தது ஏன்?

இஸ்ரேல் - ஈரான் போர்! இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்!

ஜனவரி மாத காா் விற்பனையில் எழுச்சி! மாருதி, டாடா, மஹிந்திரா நிறுவனங்கள் சாதனை!
வீடியோக்கள்

எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பேச்சைத் துவங்கிய விஜய்!
தினமணி வீடியோ செய்தி...
பெண்கள் பாதுகாப்பு; பழனிசாமிக்கு அருகதை இல்லை! MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

பழனிசாமிக்கு பதட்டமளித்த திமுக வாக்குறுதிகள்! MK Stalin Full Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

பிறக்கும்போதே குழந்தைகளுக்கு ஏற்படும் பரம்பரை நோய்! அறிகுறிகள், சிகிச்சைகள் என்னென்ன?
தினமணி வீடியோ செய்தி...

