ஏற்றத்துடன் முடிந்த பங்குச் சந்தை! சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்வு!!

வாரத்தின் முதல் நாளான இன்று(திங்கள்கிழமை) பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவு பெற்றுள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

வாரத்தின் முதல் நாளான இன்று(திங்கள்கிழமை) பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவு பெற்றுள்ளது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 81,388.26 புள்ளிகளில் தொடங்கி அதிகபட்சமாக 81,824.27 புள்ளிகளை எட்டியது.

முடிவில், செக்செக்ஸ் 611.90 புள்ளிகள் உயர்ந்து 81,698.11 புள்ளிகளில் நிறைவு பெற்றது.

கோப்புப் படம்
கொல்கத்தாவில் போராட்டம்: பணியில் 4,500 போலீசார்!

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 187.45 புள்ளிகள் உயர்ந்து 25,010.60 புள்ளிகளில் நிறைவடைந்தது.

ஐடி நிறுவனங்கள், உலோகத் துறை பெருமளவில் ஏற்றம் கண்டுள்ளன.

சென்செக்ஸில் ஹெச்சிஎல் டெக், என்டிபிசி, டைட்டன், டிசிஎஸ், ஐசிஐசிஐ வங்கி, ரிலையன்ஸ் என பெரும்பாலான நிறுவனங்கள் ஏற்றம் கண்ட நிலையில் ஐடிசி, மாருதி, சன் பார்மா, அதானி போர்ட்ஸ் உள்ளிட்ட பங்குகளின் விலை குறைந்தது.

நிஃப்டியில் ஹிண்டால்கோ, ஹெச்சிஎல் டெக், என்டிபிசி, ஓஎன்ஜிசி, பஜாஜ் பின்சர்வ் ஆகியவை ஏற்றம் கண்டன. அதேநேரத்தில் அப்போலோ ஹாஸ்பிடல், ஹீரோ மோட்டார்கார்ப், நெஸ்லே இந்தியா, அதானி போர்ட்ஸ் பங்குகள் விலை குறைந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com