சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைவிட இன்று சற்று உயர்ந்துள்ளது.
மத்திய நிதிநிலை அறிக்கையில் தங்கத்துக்கான சுங்க வரி குறைக்கப்பட்டதால் அதன் விலை தொடா்ந்து குறைந்து வந்தது. சென்னையில் ஜூலை 17-ஆம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 55,360 வரை உயா்ந்து புதிய உச்சத்தை தொட்டது.
இந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி சற்று உயர்ந்துள்ளது. அதன்படி சவரன் ரூ. 51,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 50 அதிகரித்து ரூ.6,465-க்கும், சவரனுக்கு ரூ. 400-ம் அதிகரித்துள்ளது.
நிதிநிலை அறிக்கையின் எதிரொலியாக 4 நாள்களில் ரூ.3,160 குறைந்த நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளது.
ஆனால், வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் ரூ. 89-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ. 89,000-க்கும் விற்பனையாகிறது. தொடர்ந்து வெள்ளி மூன்றாவது நாளாக ஒரே விலையில் நீட்டிக்கிறது.
மத்திய நிதிநிலை அறிக்கையில் சுங்கவரி குறைக்கப்பட்டுள்ளதால், மேலும் தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளதாக விற்பனையாளர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தங்கம் விலை அதிரடி உயர்வு: வெள்ளி?

மீண்டும் உயர்ந்த தங்கம், வெள்ளி விலை! ஒரே நாளில் ரூ. 2400 உயர்வு! (ஜூலை 2)

தங்கம் - வெள்ளி விலை உயர்வு! எவ்வளவு?

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் (22 - ஜூன்)
விடியோக்கள்

வெளியானது 'தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்' பாடல்!

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அருவருப்பான அரசியல்?: Thirumavalavan | VCK | DMK | TVK





