கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

பங்குச்சந்தை நிலவரம்: சென்செக்ஸ் உயர்வு, நிஃப்டி சரிவு!

பங்குச்சந்தை வணிகத்தின் சென்செக்ஸ் உயர்வுடம் முடிவடைந்தது. தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி சரிவுடன் முடிந்தது.

Published On :

பங்குச்சந்தை வணிகம் இன்று (ஜூன் 19) ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில், சென்செக்ஸ் உயர்வுடன் முடிவடைந்தது. தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி சரிவுடன் முடிந்தது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 36.45 புள்ளிகள் உயர்ந்து 77,337.59 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவடைந்தது. மொத்த வர்த்தகத்தில் இது 0.047 சதவிகிதம் உயர்வாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 36.30 புள்ளிகள் சரிந்து 23,521 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவு பெற்றது. மொத்த வர்த்தகத்தில் இது 0.15 சதவிகிதம் சரிவாகும்.

சென்செக்ஸ் 77,543 புள்ளிகளுடன் பங்குச்சந்தை வணிகம் தொடங்கிய நிலையில், 300 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 77,851 என்ற உச்சத்தை அடைந்தது. பின்னர் சரியத் தொடங்கி இறுதியில் 77,337 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவு பெற்றது.

பங்குச்சந்தை பட்டியலிலுள்ள முதல் 30 தரப் பங்குகளில், 15 நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன. எஞ்சிய 15 நிறுவனங்களின் பங்குகள் சரிந்தன. குறிப்பாக எல்&டி, சர் பார்மா, ரிலையன்ஸ், ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல், ஏசியன் பெயிண்ட்ஸ், டிசிஎஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிந்தன.

அதிகபட்சமாக எச்டிஎஃப்சி வங்கியின் பங்குகள் 5.32 சதவீதம் உயர்வுடன் காணப்பட்டன. அதற்கு அடுத்தபடியாக எம்&எம் நிறுவன பங்குகள் 5.25 சதவீதமும், விப்ரோ 3.95 சதவீதமும், ஆக்ஸிஸ் வங்கி 3.26 சதவீதமும், இந்தஸ்இந்த் பங்குகள் 2.96 சதவீதமும் உயர்வுடன் காணப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.