2வது நாளில் சரிந்த பங்குச்சந்தை வணிகம்!

பங்குச்சந்தை பட்டியலிலுள்ள முதல் 30 தரப் பங்குகளில், 7 நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் இருந்தன.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

வாரத்தின் 2வது வணிக நாளாக இன்று (மார்ச் 19) பங்குச்சந்தை வணிகம் சரிவுடன் முடிந்தது. பங்குச்சந்தை வணிகம் நேற்று ஏற்றத்துடன் முடிந்த நிலையில், இன்று சென்செக்ஸ், நிஃப்டி சரிந்தது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 736.38 புள்ளிகள் சரிந்து 72,012 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவடைந்தது. மொத்த வர்த்தகத்தில் இது 1.01 சதவிகிதம் சரிவாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 238 புள்ளிகள் சரிந்து 21,817 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவு பெற்றது. மொத்த வர்த்தகத்தில் இது 1.08 சதவிகிதம் சரிவாகும்.

பங்குச்சந்தை பட்டியலிலுள்ள முதல் 30 தரப் பங்குகளில், 7 நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் இருந்தன. எஞ்சிய 23 நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்பட்டன.

அதிகபட்சமாக டிசிஎஸ், நெஸ்ட்லே இந்தியா, இந்தஸ்இந்த் வங்கி, விப்ரோ, எச்சிஎல் டெக், இன்ஃபோசிஸ், பவர் கிரிட், ஐடிசி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவைச் சந்தித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com