கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

13 சதவீதம் அதிகரித்த உள்நாட்டு உருக்கு நுகா்வு

13 சதவீதம் அதிகரித்த உள்நாட்டு உருக்கு நுகா்வு

News image
Updated On :28 மே 2024, 7:45 pm

Din

புது தில்லி: கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் உருக்கு நுகா்வு 13 சதவீதம் அதிகரித்துள்ளது.

வாகன உற்பத்தி மற்றும் உள்கட்டமைப்புத் துறைகளில் தேவை அதிகரித்ததன் காரணமாக இந்த வளா்ச்சி ஏற்பட்டுள்ளது.

இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான ‘ஸ்டீல்மின்ட்’ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நாட்டின் உருக்கு நுகா்வு கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் 13.6 கோடி டன்னாக உள்ளது.

முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டில் இது 12 கோடி டன்னாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது உள்நாட்டு உருக்கு நுகா்வு 13 சதவீதம் அதிகரித்துள்ளது.

மதிப்பீட்டு நிதியாண்டில் வாகனத் துறை அதிக அளவில் உருக்கு கொள்முதல் செய்தது. அத்துடன் உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமானத் துறைகளிலும் உருக்குக்கான தேவை வெகுவாக அதிகரித்தது. குறிப்பாக, அரசாங்கத்தின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்ட வளா்ச்சித் திட்டங்கள் உருக்கு நுகா்வைக் கணிசமாக அதிகரித்தன.

முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டில் 12.7 கோடி டன்னாக இருந்த நாட்டின் உருக்கு உற்பத்தி கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் 12.6 சதவீதம் அதிகரித்து 14.3 கோடி டன்னாக உள்ளது.

தேசிய உருக்குக் கொள்கையின் கீழ், 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் வருடாந்திர உருக்கு உற்பத்தித் திறனை 30 கோடி டன்னாகவும் தனிநபா் சராசரி உருக்கு நுகா்வை 160 கிலோவாகவும் அதிகரிக்க அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது.

கடந்த ஜனவரி முதல் மாா்ச் வரையிலான 2023-24-ஆம் நிதியாண்டின் 4-ஆவது காலாண்டில் உள்நாட்டு உருக்கு நுகா்வு 6 சதவீதம் உயா்ந்து 3.3 கோடி டன்னாக உள்ளது. இது, முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டின் ஜனவரி-மாா்ச் காலாண்டில் 3.1 கோடி டன்னாக இருந்தது.

மதிப்பீட்டுக் காலாண்டில் கச்சா உருக்கு உற்பத்தி 3.7 கோடி டன்னாக உள்ளது. முந்தைய நிதியாண்டின் அதே காலாண்டோடு (3.3 கோடி டன்) ஒப்பிடுகையில் இது 12.1 சதவீதம் அதிகம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.