மும்பை : அமெரிக்க வட்டி விகிதம் குறையும் என்ற நம்பிக்கையும், அன்னிய முதலீடுகள் வருகை மற்றும் அமெரிக்க பங்குச் சந்தைகள் ஏற்றத்தாலும் இன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி தனது வாழ்நாள் உச்சத்தை எட்டியது.
இன்றைய காலை நேர வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 359.51 புள்ளிகள் உயர்ந்து 82,725.28 புள்ளிகள் என்ற புதிய சாதனை உச்சத்தை தொட்டது. அதே வேளையில் தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 97.75 புள்ளிகள் உயர்ந்து 25,333.65 புள்ளிகளை எட்டியது.
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 194.07 புள்ளிகள் உயர்ந்து 82,559.84 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 42.80 புள்ளிகள் உயர்ந்து 25,278.70 புள்ளிகளில் நிலைபெற்றது.
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள 30 நிறுவனங்களில் பஜாஜ் பின்சர்வ், ஹெச்சிஎல் டெக், ஐடிசி, டெக் மஹிந்திரா, இன்ஃபோசிஸ், ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் ஏற்றத்திலும் மறுபுறம் டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா & மஹிந்திரா, என்டிபிசி, பார்தி ஏர்டெல் உள்ளிட்ட பங்குகள் சரிந்து வர்த்தகமானது.
ஆசிய சந்தைகளில், சியோல் உயர்ந்தும், அதே நேரத்தில் டோக்கியோ, ஷாங்காய் மற்றும் ஹாங்காங் ஆகியவை சரிந்தது. அமெரிக்க சந்தைகள் (வெள்ளிக்கிழமை) உயர்வுடன் முடிவடைந்தன.
அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் வெள்ளிக்கிழமையன்று ரூ.5,318.14 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.
உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 0.82 சதவிகிதம் குறைந்து 76.30 அமெரிக்க டாலராக உள்ளது.
கடந்த வாரம் எஃப்ஐஐ-கள் பங்குகளை வாங்குபவர்களாக மாறியதால் சந்தையில் மேம்பட்ட உணர்வு பற்றிக்கொண்டது என்று ஜியோஜித் நிதி சேவைகளின் தலைமை முதலீட்டு ஆலோசகர் வி.கே.விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கச்சா எண்ணெய் விலை சரிவால் இந்தியப் பங்குச் சந்தை மீட்சி! சென்செக்ஸ் 790 புள்ளிகள் உயர்வு!!

கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட சென்செக்ஸ், நிஃப்டி!

அமெரிக்கா - ஈரான் ஒப்பந்தம் எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக ஏற்றம் கண்ட சென்செக்ஸ், நிஃப்டி!

அமெரிக்கா-ஈரான் ஒப்பந்தத்தால் 2% ஏற்றம் கண்ட இந்தியப் பங்குச் சந்தை!!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



