45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! 1,200 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!!

வாரத்தின் தொடக்கநாளான இன்று(திங்கள்கிழமை) பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியுடன் முடிவடைந்துள்ளன.

News image
கோப்புப்படம்
Updated On :30 செப்டம்பர் 2024, 11:36 am

DIN

வாரத்தின் தொடக்கநாளான இன்று(திங்கள்கிழமை) பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியுடன் முடிவடைந்துள்ளன.

மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் முதல்முறையாக 85,000 புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 85,208.76 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில், வர்த்தக நேர முடிவில் 1,272.07 புள்ளிகள் குறைந்து 84,299.78 என்ற புள்ளிகளில் நிறைவுற்றது.

அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி,முடிவில் 368.10 புள்ளிகள் குறைந்து 25,810.85 புள்ளிகளில் வர்த்தகமானது.

கடந்த வாரம் சென்செக்ஸ், நிஃப்டி இரண்டும் புதிய உச்சத்தை அடைந்து சாதனை படைத்த நிலையில் இன்று வீழ்ச்சியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்செக்ஸில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஆக்சிஸ் வங்கி ஆகிய நிறுவனங்கள் அதிக சரிவை சந்தித்தன. பாரதி ஏர்டெல், எம்&எம், எஸ்பிஐ, டிசிஎஸ், இன்போசிஸ், டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலையும் குறைந்தன.

பொதுவாக ஆட்டோமொபைல், நிதிச் சேவை நிறுவனங்கள், ஐ.டி., மீடியா, ரியாலிட்டி, ஹெல்த்கேர், எண்ணெய் மற்றும் எரிவாயு உள்ளிட்ட துறைகள் 1.6% வரை சரிந்தன.

அதேநேரத்தில் நிஃப்டி உலோகத் துறை 1.5% அதிகரித்தது. சீனா பொருளாதாரத்தைத் தூண்டுவது குறித்து அறிவிப்பு வெளியிட்டதைத் தொடர்ந்து என்எம்டிசி, ஹிண்டால்கோ, செயில்(SAIL) ஆகிய நிறுவனங்கள் ஏற்றம் கண்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.