நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

சாகச விரும்பிகளுக்கான சிஎஃப் மோட்டோ 450 எம்டி.!

சாகச விரும்பிகளுக்கான சிஎஃப் மோட்டோ 450 எம்டி.!

News image

சிஎஃப் மோட்டோ 450 எம்டி..

Updated On :8 ஏப்ரல் 2025, 8:15 pm IST

நெடுந்தூரங்களுக்கு பயணம் மேற்கொள்ள விரும்புவர்களுக்காக ரூ.4 லட்சத்தில் புதிய பைக் ஒன்றை சிஎஃப் மோட்டோ நிறுவனம் வெளியிட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு இந்திய போக்குவரத்து சந்தையில் ஏஎம்டபிள்யூ நிறுவனத்துடன் இணைந்து 650cc மற்றும் 300cc மாடல்களுடன் தங்களது பைக்குகளை வெளியிட்டு தோல்வியடைந்தது.

இதனால், சாகசம் மற்றும் நெடுந்தூரப் பயணிகளைக் கவரும் வகையில் புதிய 450cc கொண்ட சிஎஃப் மோட்டோ 450 எம்டி பைக்கை வெளியிட்டுள்ளது. இதன் விலை ரூ. 4 லட்சத்தில் இருந்து ரூ. 4.5 லட்சம் வரை இருக்கும் என்றும், இது வருகிற ஜூலை மாதம் முதல் விற்பனைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ராயல் என்ஃபீல்டின் ஹிமாலயன் 450, கேடிம் 390 ஆகிய பைக்களுக்கு போட்டியாக இந்த பைக் களமிறக்கப்பட்டுள்ளது.

Story image

சிறப்பம்சங்கள்

  • இரண்டு சிலிண்டர்களை கொண்டுள்ளது - 449.5 cc

  • திறன் (power) - 43.6 குதிரைத்திறன்

  • முடுக்குவிசை (torque) - 44.0 nm

  • பெட்ரோல் கொள்ளளவு - 17.5 லிட்டர்

  • கிரௌண்ட் கிளியரஸ் - 220 மில்லிமீட்டர்

  • இருக்கை உயரம் - 820 மில்லிமீட்டர்

  • இரண்டு சக்கரங்களுக்கு இடைவெளி - 1505 மில்லிமீட்டர்

  • எடை - 175 கிலோ கிராம்

  • கியர் - 6 கியர்கள்

  • ப்ரேக் - முன் பின் டிஸ்க் பிரேக்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.