ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

லேப்டாப் தயாரிப்பில் களமிறங்கும் செல்போன் நிறுவனம்!

அமெரிக்காவைச் சேர்ந்த மோடோரோலா நிறுவனம், மடிக்கணினி தயாரிப்பில் களமிறங்கவுள்ளது.

News image

மோடோரோலா அறிவிப்பு...

Updated On :8 ஏப்ரல் 2025, 5:41 pm IST

அமெரிக்காவைச் சேர்ந்த மோடோரோலா நிறுவனம், மடிக்கணினி தயாரிப்பில் களமிறங்கவுள்ளது. இந்திய சந்தைகளுக்கான மடிக்கணினியாக அவை இருக்கும் எனவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

சாம்சங், ஆப்பிள், இன்ஃபினிக்ஸ் போன்ற ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள், மடிக்கணினிகளையும் தயாரித்துவரும் நிலையில், இந்த வரிசையில் மோடோரோலாவும் இணையவுள்ளது.

அமெரிக்காவின் சிகாகோ நகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மோடோரோலா நிறுவனம், இந்திய மின்னணு சந்தைகளில் நம்பகத்தன்மை வாய்ந்த தயாரிப்புகளைக் கொடுத்துள்ளன.

குறிப்பாக மோடோரோலா எட்ஜ் 40, எட்ஜ் 50, மோடோரோலா ரேஸர் வரிசை ஸ்மார்ட்போன்கள் மிகுந்த பிரபலமானவை. ஸ்மார்ட்போன்கள் தயாரிப்பில் இந்திய சந்தையின் வரவேற்பைப் பெற்ற மோடோரோலா நிறுவனம், தற்போது இந்திய பயனர்களைக் கவரும் வகையில் மடிக்கணினி தயாரிப்பில் கவனம் செலுத்தவுள்ளது.

மடிக்கணினி தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக உள்ள லெனோவோ நிறுவனத்தின் உதவியுடன் இந்திய சந்தையில் மோடோரோலோ மடிக்கணினிகள் அறிமுகமாகவுள்ளன.

எனினும் மடிக்கணினியின் பெயர் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த எந்தவொரு தகவலையும் அந்நிறுவனம் வெளியிடவில்லை. விற்பனைக்காக ஃபிளிப்கார்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இது குறித்து மோடோரோலா வெளியிட்டுள்ள அறிவிப்பில், ’மடிக்கணினிகளின் புதிய உலகம் விரைவில் வெளியாகும்’ எனப் பதிவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், மோடோரோலா நிறுவனம் புதிய மடிக்கணினிகளைத் தயாரிக்குமா? அல்லது லெனோவோ மடிக்கணினிகளின் மாதிரி வடிவமாக இருக்குமா? என பயனர்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

ஆப்பிள், ஏசஸ், லெனோவோ போன்றவை பிரீமியம் மடிக்கணினிகளை தயாரிப்பதில் கவனம் செலுத்திவருவதால், அவற்றில் ஒன்றாக மோடோரோலா இருக்குமா அல்லது தனித்து இருக்குமா என்ற கேள்வி பயனர்களிடையே எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.