எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

பல்வேறு வண்ணங்களில் ஹோண்டா ஹைனஸ் சிபி350!

பல்வேறு வண்ணங்களில் ஹோண்டா ஹைனஸ் சிபி350 பைக் பற்றி...

News image

ஹோண்டா ஹைனஸ் சிபி350

Updated On :11 ஏப்ரல் 2025, 5:55 pm IST

ஹோண்டா நிறுவனத்தின் ஹைனஸ் சிபி350 என்ற அதிநவீன பைக் தற்போது போக்குவரத்து சந்தைகளில் வெளியாகியுள்ளது. இதில், டிஎல்எக்ஸ்., டிஎல்எக்ஸ் புரோ மற்றும் டிஎல்எக்ஸ் புரோ குரோம் ஆகிய மூன்று வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த பைக்குகளில் 348.36cc ஏர் கூல்டு சிங்கிள் சிலிண்டர் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் மற்றும் ஸ்லிப் அசிஸ்ட் கிளட்ச் இடம்பெற்றிருப்பதுடன், 20.7 குதிரைத் திறனையும், 30nm டார்க்கையும் வெளிப்படுத்தும்.

மேலும் புதிய புதிய வாகன சுற்றுச்சூழல் விதிகளுக்கு ஏற்ப bs6 OBD தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது. இந்த மாடலில் இப்போது புதிய வண்ணங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

மேலும் புளூடூத் இணைப்புடன் கூடிய செமி டிஜிட்டல் கன்சோல், டூயல் சானல் abs ஆகிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இதன் ஷோரூம் விலை ரூ.2.10 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதன் பெட்ரோல் டேங்க் கொள்ளளவு 15 லிட்டரும், 35 கிலோமீட்டர் மைலேஜ் கொடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் சீட்டில் உயரம் 800 மில்லிமீட்டர். இது நீலம், சாம்பல், வெள்ளை, கருப்பு, அரக்கு உள்பட 8 நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஹோண்டா ஹைனஸ் சிபி350 ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் வண்டிகளுக்கு போட்டியாக களமிறக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.