
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் சவரனுக்கு ரூ. 1,485 உயர்ந்துள்ளது.
கடந்த வார இறுதிமுதல் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்துவந்த நிலையில், புதன்கிழமை சவரனுக்கு ரூ. 1,480, வியாழக்கிழமை ரூ. 1,200 தடாலடியாக அதிகரித்தது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை சவரனுக்கு ரூ. 1,485 மீண்டும் உயர்ந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒரு கிராம் ரூ. 8,745-க்கும் ஒரு சவரன் ரூ. 69,960-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை கடந்த ஏப்.4 முதல் குறைந்துகொண்டே வந்தது. இதனால், இல்லத்தரசிகளும் மக்களும் சற்று நிம்மதியடைந்த நிலையில், மேலும் குறையுமா என்று எதிர்பார்த்து வந்த நிலையில், எதிர்மாறாக, மூன்று நாள்களில் ரூ. 4,165 உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வெள்ளியின் விலை இன்று காலை கிராமுக்கு ஒரு ரூபாய் அதிகரித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 108-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,08,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.